- Back to Home »
- அங்கிகள் தொடர்பானது »
- நோர்வே தேசிய பூங்காவில் தனியொரு மின்னல் தாக்கத்தினால் 323 கலைமான்கள் பலி
Posted by : gatherpage
Wednesday, September 14, 2016
நோர்வே தேசிய பூங்காவில் புயலுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்ட மின்னல் தாக்கமொன்றில் சுமார் 323 கலைமான்கள் ஒரே சமையத்தில் உயிரிழந்துள்ளன. (26.08.2016) இவற்றில் 70 குட்டிகளும் உள்ளடங்குகின்றன. இதற்கு முன் 2005 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவிலுள்ள பால் பண்ணையில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினால் 68 பசுக்கள் உயிரிழந்தமையே தனியொரு மின்னல் தாக்கத்தினால் அதிகளவு விலங்குகள் பலியான சம்பவமாக கின்னஸில் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

