- Back to Home »
- விளையாட்டு தொடர்பானது »
- சம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி
Posted by : gatherpage
Monday, July 27, 2015
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் நடாத்தப்படும் டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகள் 25.07.2015 ஆம் திகதி (சனிக்கிழமை) ஆரம்பமானது.
இப்போட்டி ஆறிவிப்புக்கான நிகழ்வு 22.07.2015 ஆம் திகதி(புதன்கிழமை) விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஆகியோர் போட்டித் தொடரை அறிமுகம் செய்தனர்.
இந்த டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்துப் போட்டியில் மொத்தம் 22 அணிகள் பங்குபற்றுகின்றன.
சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வெற்றிக் கிண்ணமும் 10 இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும்.
இப்போட்டித் தொடருக்கு டயலொக் நிறுவனம் அனுசரனை வழங்குகின்றது.

