- Back to Home »
- மருத்துவ விடயங்கள் »
- விஷப்பூச்சிக் கடி தொடர்பானது
விஷப்பூச்சிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய கால கட்டத்தில்இ அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது. முன்னைய காலத்தில் கிராமப்புறங்களில் செடி, கொடிகளுக்கு இடையே மட்டுமே காணப்பட;ட விஷப்பூச்சிகள் தற்போது நகர்ப்புறங்களுக்குள் படை எடுக்க தொடங்கி விட்டன. இந்தச்சூழலில் திடீரென தேனீ மற்றும் குளவி போன்றவை கடித்தால் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்பது தொர்பாக ஆராய்வோம்.
• விஷப்பூச்சி கொட்டினால் செய்யக்கூடாதவை
விஷப்பூச்சி கடித்த இடத்தில் கீறுதல், விஷத்தை உறிஞ்சுதல், மிகுந்த அழுத்தம் கொடுத்தல், மருந்துகள் தடவுதல், தேவையில்லாமல் இறுக்கமாக கட்டுதல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
• அபாய அறிகுறிகள்
மூச்சுத்திணறல்
முகம்இ உதடு, நாக்கு அல்லது தொண்டை வீக்கம்
கடும் தலைச்சுற்றல், மயக்கம்
தொடர்ந்து வாந்தி அல்லது வாந்தி உணர்வு
இதயத் துடிப்பு அதிகரித்தல்
உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுதல்
கடும் அலர்ஜி
.png)