- Back to Home »
- வானியல் »
- சீனாவின் டியாங்கோங் -1 கட்டுப்பாடற்ற பாதையைத்தொடர்ந்தால் அழிவினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு
Posted by : gatherpage
Thursday, March 15, 2018
விண்வெளி ஆய்வுகூடம் டியாங்கோங் -1 (Tiangong-1) விண்வெளியில் 2011 ஆம் ஆண்டு சீனாவினால் அமைக்கப்பட்டது. எனினும் 2016ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டைமுற்றாக இழந்தது. தற்போது இது அதன் கட்டுப்பாடற்ற பாதையைத்தொடர்ந்தால் 2018 ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் பூமியுடன் மோதி அழிவினை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதிகவேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் -1 பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது எரியத்தொடங்கிவிடும். எனினும் சில பகுதிகள்பூமியில்மோதக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் ஏற்படக்கூடிய இப்பாதிப்பு தொடர்பாக சரியான தகவல்கள் தற்போதுவரை வெளியிடப்படவில்லை.
