- Back to Home »
- மருத்துவ விடயங்கள் »
- ரோபோ சத்திரசிகிச்சைகளால் அமெரிக்காவில் 144 பேர் பலி
Posted by : gatherpage
Saturday, July 25, 2015
அமெரிக்காவில் ரோபோக்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் காரணமாக கடந்த 14 வருட காலப்பகுதியில் குறைந்தது 144 பேர் பலியானதுடன் 1000 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாக புதிய ஆய்வொன்று கூறுகின்றது.
ரோபோ உபகரணங்கள் நோயாளிகள் மீது விழுந்தமை, அந்த முறையிலான தவறுகள் மற்றும் இழையங்கள் மின்சார ஒழுங்கீனங்களால் எரிக்கப்பட்டமை காரணமாக இந்த மரணங்களும், காயங்களும் ஏற்பட்டதாக இலினொயிஸ் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு கூறுகிறது.

