- Back to Home »
- தொழில்நுட்பம் »
- செயற்கை மழை
Posted by : gatherpage
Thursday, October 3, 2013
வானத்தில் மழை பொழியும் மேகம் திரண்டாலும் பல சமயம் மழை பெய்வதில்லை. அந்த நேரத்தில் செயற்கை முறையில் மழையைப் பெய்யச் செய்யலாம். மேகத்தில் உள்ள நீர்த்திவலைகள், தூசியின் உதவியால் பருமனடைந்து மழையாகப் பெய்கின்றன.
தூசியின் அளவு போதாத பொழுது நீர்த்திவலைகள் பருமன் அடைய இயலாமல் மழை பெய்வதில்லை. அந்த நேரத்தில் காபனீரொட்சைட்டையோ அல்லது வெள்ளி அயோடைட்டு புகையையோ மேகம் உள்ள பகுதியில் பரவ விடுவர். அவை நீர்த்திவலைகளை கனமாக்கி செயற்கையாக மழையை பெய்விக்கச் செய்யும். இதுவே செயற்கை மழை எனப்படும்.

